Thu. May 2nd, 2024

கரணவாயில் அனுமதியின்றிய திருமணம் 50 ற்கும் மேற்பட்டோர் சுய தனிமைப்படுத்தல்

வடமராட்சி பகுதியில் கொவிட் 19 கட்டுப்பாடுகளை மீறி அனுமதியின்றி நடாத்தப்பட்ட திருமண நிகழ்வில் கலந்து கொண்ட குருக்கள், புகைப்படப் பிடிப்பாளர்கள் உட்பட சுமார் 50 ற்கும் மேற்பட்டோர் சுய தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் இன்று மண்டான் கரணவாய் மேற்கு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
அனுமதியின்றி திருமண நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நெல்லியடி பொலீஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் குறித்த பகுதிக்குச் பொலீஸார்  செய்துள்ளனர்.
இதனையடுத்து நிகழ்வில் கலந்து கொண்ட பலர் தப்பியோடியுள்ளனர்.  இது தொடர்பாக குறித்த பொதுச் சுகாதார பரிசோதகருக்கு தெரியப்படுத்தியதையடுத்து அப்பகுதிக்கு வருகை தந்த பொதுச் சுகாதார பரிசோதகர் மண மகன்,  மண மகள் குடும்பத்தினர்,  திருமண நிகழ்வை நடாத்திய குருக்கள் மற்றும் புகைப்பட படப்பிடிப்பாளர் ஆகியோரை தனிமைப்படுத்தி வைக்கப்பட்டதோடு திருமண நிகழ்வில் கலந்து கொண்ட ஏனையோரையும் தனிமைப்படுத்தி வைப்பதற்கான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது .

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்