Fri. May 17th, 2024

கருணை உள்ளங்கள் அறக்கட்டளையால் 100 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு

கருணை உள்ளங்கள் அறக்கட்டளை 99 வடமராட்சி அமைப்பினரால்
2 லட்சத்து 66 ஆயிரத்து 250 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
கருணை உள்ளங்கள் அறக்கட்டளை 99 வடமராட்சி அமைப்பினரால் கரவெட்டி பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராம அலுவலகர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 100 குடும்பங்களுக்கு இன்று உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.
கரணவாய் கிழக்கு J/349 கிராம அலுவலகர் பிரிவில் 05 குடும்பங்களுக்கும், கரணவாய் தெற்கு J/348 கிராம அலுவலகர் பிரிவில் 15 குடும்பங்களுக்கும், கரவை கிழக்கு J/351 கிராம அலுவலகர் பிரிவில்  03 குடும்பங்களுக்கும்,  கரவெட்டி தெற்கு J/365 கிராம அலுவலகர் பிரிவில்  15 குடும்பங்களுக்கும்,  கரவெட்டி கிழக்கு J/368 கிராம அலுவலகர் பிரிவில் 10 குடும்பங்களுக்கும்,  கரவெட்டி வடக்கு J/364 கிராம அலுவலகர் பிரிவில் 15 குடும்பங்களுக்கும், நெல்லியடி வடக்கு J/375 கிராம அலுவலகர் பிரிவில் 10 குடும்பங்களுக்கும்,  கரணவாய் வடமேற்கு J/361 கிராம அலுவலகர் பிரிவில் 10 குடும்பங்களுக்கும், சமரபாகு J/357 கிராம அலுவலகர் பிரிவில் 10 குடும்பங்களுக்கும், இமையாணன் தெற்கு  J/359 கிராம அலுவலகர் பிரிவில் 05 குடும்பங்களுக்கும் என 10 கிராம அலுவலகர் பிரிவில் 100 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்