Tue. May 7th, 2024

நெல்லியடி சந்தையில் பிற்பகல் 3 மணியளவில் பேரணி ஆரம்பிக்கும்

பொத்துவில் முதல் பொலிகண்டி வரைக்குமான பேரணிக்கு அனைவரும் ஒன்றிணைவோம் எனக் கட்சி சாரா அமைப்புக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.  இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் நெல்லியடி சந்தையில்  இருந்து ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இதன் பேரணி  நெல்லியடி மாலைசந்தியூடாக பருத்தித்துறை,  பருத்தித்துறையிலிருந்து கடற்கரை வழியாக சுப்பர் மடம், திக்கம் சந்திவரை சென்று திக்கம் சந்தியூடாக வதிரிச் சந்தி, உடுப்பிட்டியூடாக வல்வெட்டித்துறை தீருவில், வல்வெட்டித்துறை நகரம், நெடியகாட்டின் ஊடாக  பொலிகண்டியைச் சென்றடையவுள்ளது. எனவே வடமராட்சி மக்கள் அனைவரும் ஆதரவு தெரிவிக்கும் முகமாக அணி திரளுமாறும் கேட்கப்பட்டுள்ளது. வடமராட்சியில் அல்வாய் இந்து இளைஞர் விளையாட்டு கழகம், வடமராட்சி பசுமை நிழல், இமையாணன் மத்தி விளையாட்டு கழகம், இமையாணன் இளைஞர் விளையாட்டு கழகம்,  வல்வை இளைஞர்கள் விளையாட்டு கழகம்,  வடமராட்சி கிழக்கு விளையாட்டு கழக இளைஞர்கள், கரவெட்டி வரம்புகள் விளையாட்டு கழகம் எனப் பலரும் தமது ஆதரவை தெரிவிப்பதற்கு தயார் நிலையில் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்