Thu. May 2nd, 2024

வயோதிபர்கள் மீது அதிக கவனம் தேவை, சத்தியமூர்த்தி தெரிவிப்பு

வயோதிபர்கள் மீது கூடுதல் கவனம் வேண்டும். அவர்களை பராமரித்து பாதுகாப்பது  எல்லோரினதும் தார்மீக கடமை என யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கொரோனா காலப்பகுதியில் வயோதிபர்கள் உரிய முறையில் பராமரிக்கப்பட வேண்டும்.
அந்த வகையில் அவர்களுக்கு தினசரி கிடைக்கவேண்டிய உரிய உணவு உட்பட அனைத்து வசதிகளும் செய்யப்பட வேண்டும்.
கைதடி வயோதிபர் இல்லத்தில் வசிக்கும் கொரோனா தொற்றுக்குள்ளான வயோதிபர்கள் அனைவரும் போதனா வைத்தியசாலை மேற்பார்வையின் கீழ் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும்  உத்தியோகத்தர்களின்  உரிய சுகாதார வசதிகளுடன் கைதடி முதியோர் இல்ல நிர்வாகத்தினால் உரிய முறையில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த உயரிய சேவையைச் செய்யும் அனைவருக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்