இரட்டை குழந்தையை பிரசவித்த இளம்தாய் கொரோனாவால் மரணம்
இரட்டை குழந்தையை பிரசவித்த இளம் தாய் கொரோனா தொற்றுக்கு இலக்காகிய நிலையில் உயிரிழந்துள்ளார்.
நேற்று யாழ் போதனா வைத்தியசாலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இணுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட இணுவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த வினுஜா அஜிதன் (வயது 25) என்பவரே உயிரிழந்துள்ளார்.
நேற்றைய தினம் குறித்த பெண் குழந்தை பிரசவிப்பதற்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கான பிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா விடுதியில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று இரட்டை குழந்தையை பிரசவித்த போதிலும் நேற்றைய தினமே அவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.