வடமராட்சி பகுதியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட நால்வர் கைது
வடமராட்சி பகுதியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட நால்வரை பருத்தித்துறை பொலீஸார் இன்று கைது செய்துள்ளனர்.
வடமராட்சி பகுதியில் தாலிக்கொடி அறுப்பு மற்றும் வீடுகளில் உட்புகுந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் என்ற குற்றச்சாட்டில் நான்கு பேரைப் பொலீஸார் கைது செய்துள்ளனர். இவர்களில் மூவர் புனித நகர் பகுதியையும், ஒருவர் பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிய வந்துள்ளது