வணிகபீட மாணவர்களுக்கு “BOCவிருது”;
யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் வணிகபீட மாணவர்களுக்கு “BOCவிருது”; என்ற நாமத்தில் தங்கபதக்கம் ஒன்றினை வழங்க உத்தியோக பூர்வ புரிந்துணர்வு உடன்படிக்கையில் இலங்கை வங்கி இணைகின்றது.
மாணவர்களின் நலன் கருதிஅவர்களினை எதிர்காலத்தில் சுபீட்சம் உடைய தலைவர்களாக உருவாக்கி கொள்ளும் வகையில் மாணவர்களினை ஊக்குவிக்கும் நோக்கில் மாணவர்களுக்கு ஒரு புலமை பரிசில் திட்டத்தினை வழங்க உத்தியோக பூர்வ புரிந்துணர்வு உடன்படிக்கையில் மார்கழி மாதம் 15 ஆம் திகதி வியாழக்கிழமை கைச்சாத்து இடுவதன் மூலமாக முகாமைத்துவக் கற்கைகள் வணிக பீடமும் இலங்கை வங்கியும் சட்ட ரீதியாக இணைகின்றது