Sun. May 5th, 2024

வடக்கு உட்பட 8 மாவட்டங்களில் தொடர்ந்து ஊரடங்கு அமுலில்

நாட்டின் 8 மாவட்டங்களில் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு தவிர, நாட்டின் பிற பகுதிகளில் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்று 8 மணி நேரத்திற்கு தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 6.00 மணிக்கு ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டது. இருப்பினும், மதியம் 2.00 மணி முதல் அந்த பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு மீண்டும் விதிக்கப்படுவதுடன் அது நாளை (24) காலை 6.00 மணிவரை அமுலில் இருக்கும் .

வெள்ளிக்கிழமை (20) மாலை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு விதிக்க அரசாங்கம் முடிவு செய்தது.

கொழும்பு, கம்பஹா, புத்தளம், மன்னார், வவுனியா, முல்லைதீவு , கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு நாளை (24) காலை 6.00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த இடங்களில் நாளை காலை 6.00 மணிக்கு ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டு, பிற்பகல் 2.00 மணிக்கு மீண்டும் விதிக்கப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்