ரட்ணசபாபதி ஞாபகார்த்த Battle of the colleges கிண்ணத்திற்கான கால்பந்தாட்ட போட்டிகள் நாளை
இரத்தினசபாபதி ஞாபகார்த்த Battle of the colleges கிண்ணத்திற்கான கால்பந்தாட்ட போட்டி நாளை சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு நெல்லியடி மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
நெல்லியடி மத்திய கல்லூரி மற்றும் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரிகளில் அதிபராக கடமையாற்றிய அமரர் இரத்தினசபாபதியை நினைவு கூரும் முகமாக நெல்லியடி மத்திய கல்லூரிக்கும் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரிக்கும் பல்வேறு கட்டங்களாக கால்பந்தாட்ட போட்டிகள் முதன் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் காலை 9 மணிக்கு இரு கல்லூரிகளிலும் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான போட்டியும், 10 மணிக்கு பழைய மாணவர்களுக்கான போட்டியும், பிற்பகல் 2 மணிக்கு நெல்லியடி மத்திய கல்லூரி நுழைவாயிலில் இருந்து விருந்தினர்கள் நெல்லியடி மத்திய கல்லூரி மைதானத்திற்கு அழைத்துவரப்பட்டு 14 வயதிற்குட்பட்ட மற்றும் 20 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான போட்டியும் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுத்து சிறிசற்குணராஜா அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி அதிபர் த.கலைச்செல்வன், நெல்லியடி மத்திய கல்லூரி அதிபர் க.கிருஷ்ணகுமார் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.