யாழ் மாவட்ட புகைப்படப் பிடிப்பாளர் கூட்டுறவுச் சங்கத்தின் புதிய நிர்வாக தெரிவு
யாழ் மாவட்ட புகைப்படப் பிடிப்பாளர் கூட்டுறவுச் சங்கம்
2024ஆம் ஆண்டுக்கான பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை உறுப்பினர்கள் தெரிவும் கடந்த செவ்வாய்க்கிழமை திருநெல்வேலி கம்சிகா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டுறவு உதவி ஆணையாளர்
கி.சந்திரசேகரன் முன்னிலையில் புதிய நிர்வாக சபை உறுப்பினர்கள் தெரிவு இடம்பெற்றது.
இதில் தலைவராக ஆ.பிரபாகரன்,
உபதலைவராக கு. கமலதாசன்,
செயலாளராக அ.ஜெயச்சந்திரன்,
பொருளாளராக தி.ஜெயபாலன், மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்களாக மா.மகேந்திரன்,
ச.ரிஜிகேசன்,வஷ்சலன், இளமாறன், F.P. மயூரன் ஆகியோரும் வடமராட்சி இணைப்பாளராக எஸ்.பரமேஸ்வரன், தென்மராட்சி இணைப்பாளராக கே.திருமாறன், வலிகாமம் இணைப்பாளராக
எஸ்.தஜீதரன், தீவகம் இணைப்பாளராக எம்.மணிவண்ண்ன் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.