Mon. Apr 29th, 2024

மூத்த விநாயகர் ஆலய தொடர்பு 18 பேருக்கு தொற்று

கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட கரணவாய் பொதுச் சுகாதார பிரிவில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கரணவாய் மூத்த விநாயகர் ஆலயத்தில் அண்மையில் திருவிழா நிகழ்வு நடைபெற்றது. ஆலயத்தில் பலர் ஒன்று கூடி திருவிழா நடாத்தப்பட்டதோடு, அங்கு தொண்டாற்றிய ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதனையடுத்து நேற்று முன்தினம் அப்பகுதியில் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.  இதில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்