Fri. Apr 26th, 2024

ஆசிரியர்களும் நாளை முதல் பணிக்கு அழைப்பு

பாடசாலைகள் உட்பட அனைத்து நிறுவனங்களின் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடமைக்கு செல்ல வேண்டும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கே.கபில சீ.கே.பெரேரா அறிவித்துள்ளார்.

இன்று கடிதமிடப்பட்ட திகதியுடன் சகல மாகாண கல்வி பணிப்பாளர்கள், வலயக் கல்வி பணிப்பாளர்கள், கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள் என அடையாளப்பகுதி அரச சேவைகளை வழமையான ஒழுங்கில் முன்னெடுத்தல் எனும் தலைப்பில் அனுப்பப்பட்டுள்ளது.
இதில் சகல அரச நிறுவனங்களின் பணியாளர்களும் கடமைக்கு செல்ல வேண்டும் என்பதுடன் பாடசாலையின் கல்வி சார், கல்வி சாரா ஊழியர்கள் நாளை முதல் கடமைக்கு செல்ல வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்