Mon. May 6th, 2024

முல்லை. மாவட்ட விவசாயக் குழுக் கூட்டம்

முல்லைத்தீவு மாவட்ட விவசாயக் குழுக் கூட்டம் இன்று(22) காலை 9.30மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தலைமையில் இடம்பெற்றது.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் மாவட்டத்தில் விவசாய செய்கை தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.

குறிப்பாக பயிர்ச்செய்கையின் தற்போதைய நிலை, விவசாயத்துடன் தொடர்புடைய திணைக்களங்களால் மேற்கொள்ளப்படும் செயற்திட்டங்கள், விவசாயிகளின் பிரச்சினைகள், உர மற்றும் எரிபொருள் விநியோகம், காப்புறுதி, வங்கிகளின் விவசாய கடன் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன், மாவட்ட விவசாய பணிப்பாளர் ஆர்.கோகுலதாசன், மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் ம.கி வில்வராஜா, மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் மு.முபாரக், பிரதேச செயலாளர்கள், துறைசார் உயர் அதிகாரிகள், துறைசார் உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்