Wed. Apr 24th, 2024

கட்டாரில் FIFA ஏற்பாடுகள் தீவிரம்

2022 FIFA உலகக்கோப்பை
கால்பந்துப் போட்டி கட்டாரில் நடைபெறவுள்ள நிலையில் அதன்
ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது.
மத்திய கிழக்கு மற்றும் அரபு நாடுகளில் முதல்முறையாக FIFA உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி இந்த வருடம் நடைபெறவுள்ளது.
அதன்படி கட்டாரில்  வரும் நவம்பர் 20- ஆம் திகதி முதல் டிசெம்பர் 18-ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டியை நடத்துவதற்காக கட்டார் வேகமாக தயாராகி வருகின்றது என FIFA உலகக்கோப்பை போட்டிக்கான உச்சிக்குழு பொதுச்செயலாளர் ஹசன் அல் தவாடி தெரிவித்துள்ளார்.
மொத்தம் 8 விளையாட்டு அரங்குகளில் 64 போட்டிகள்  நடைபெறவுள்ளன.
அனைத்து விளையாட்டு அரங்கங்களும் தலைநகர் டோகாவில் இருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ளன.
போட்டியில் கலந்துகொள்ளும் அணிகள் மற்றும் ரசிகர்களின் பயண வசதிக்கேற்ப அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்