மட்டுவிலில் தற்கொலை செய்த யுவதி
சாவகச்சேரி மட்டுவில் பகுதியில் இளம் யுவதியொருவர் நேற்று தற்கொலை செய்து உயிரிழந்துள்ளமை அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. மட்டுவில் கிழக்கு தேவாலய பகுதியை சேர்ந்த தர்மகுலராசா மாருதி (22) என்ற யுவதியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நேற்று (21) பெற்றோர் வேலைக்காக வெளியில் சென்றிருந்த வேளை வீட்டு சுவாமி அறைக்குள் குறித்த யுவதி துக்கில் தொங்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.