Sat. May 18th, 2024

இளம் பெண் கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

தென்மராட்சி மட்டுவில் பகுதியில்  22 வயது பெண் கழுத்தில் சுருக்கிட்ட  நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டுவில் பகுதியில் 22 வயது பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று  மதியம் 12 மணியளவில் தேவாலய வீதி மட்டுவில் கிழக்கு மட்டுவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் தர்மகுலராசா மாருதி வயது 22 என்பவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தந்தை,தாய் வேலை நிமிர்த்தம் வெளியில் சென்றிருந்த வேளை வீட்டினுள் சாமி அறைக்குள் குறித்த பெண் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவ வேளை பெண்ணின் இரு தம்பிமாரும் (சிறியவர்கள்) விளையாடிக் கொண்டு இருந்துள்ளனர் தாத்தாவும் வீட்டில் இருந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. சாவகச்சேரி நீதிமன்ற நீதவானின் பணிப்பின் பின்னர் தென்மராட்சி பிரதேசத்தின் திடீர் மரண விசாரணை அதிகாரி சி. தவமலர் விசாரணைகளை மேற்கொண்ட பின் யாழ்.போதனா வைத்தியசாலையின் சட்டவைத்திய நிபுணரின் உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்