Mon. Apr 29th, 2024

போதையில் மோட்டார் சைக்கிளை செலுத்தி விபத்து ஒருவர் கைது ஒருவர் தப்பியோட்டம்

போதையில் மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த இருவர் முச்சக்கர வண்டியுடன் விபத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் முச்சக்கர வண்டி கண்ணாடியையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
இச்சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை நெல்லியடி முடக்காட்டு சந்திக்கு அருகில் நடைபெற்றுள்ளது.
போதையில் மோட்டார் சைக்கிளில்

முடக்காட்டு வீதி ஊடாக பருத்தித்துறை யாழ்ப்பாணம் பிரதான வீதிக்கு வந்தவர்கள் பிரதான வீதியில் பயணித்த முச்சக்கர வண்டியுடன் விபத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்தவர்கள் முச்சக்கர வண்டி கண்ணாடியையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். சம்பவம் தொடர்பாக நெல்லியடி பொலீசாருக்கு அறிவித்ததன் பேரில் 21 வயதுடைய இராஜகிராமம் பகுதியைச் சேர்ந்த ஒருவரை கைது செய்துள்ளதுடன், ஒருவர் தப்பியோடிய உள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்