Sat. Apr 27th, 2024

முல்லை கபடியில் ஆண்கள் பிரிவில் முத்தமிழன் விளையாட்டு கழகமும் பெண்கள் பிரிவில் பாலிநகர் ஸ்கைலாப் விளையாட்டு கழகமும் சம்பியன்

முல்லை/மாந்தைகிழக்கு அம்பாள்புரம் முத்தமிழன் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட மாபெரும் கபடி சுற்றுப் போட்டியில் ஆண்கள் பிரிவில் முத்தமிழன் விளையாட்டு கழகமும் பெண்கள் பிரிவில் பாலிநகர் ஸ்கைலாப் விளையாட்டு கழகமும் சம்பியன் கிண்ணத்தை தமதாக்கிக் கொண்டனர்.
முல்/வன்னி விளாங்குளம் அம்பாள்புரம் கிராமத்தின் முத்தமிழ் விளையாட்டு கழகத்தின் ஒழுங்குபடுத்தல்களுடன்  புலம்பெயர் கனடா வாழ்  தமிழர் அருண் அவர்களின் முழுமையான நிதி அணுசரணை பங்களிப்புடன்  முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டுத்துறை ஆதரவுடன் முல்லைத்தீவு மாவட்ட கழகங்களுக்கு இடையிலான ஆண்கள் பெண்களுக்கான கபடி சுற்றுப் போட்டியின் இறுதியாட்டங்கள் நேற்று  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் ஆண்கள் பிரிவில் 1ம் இடத்தை முத்தமிழன் விளையாட்டு கழகமும் , 2ம் இடம் யோகபுரம் விளையாட்டு கழகமும் பெற்றனர்.
பெண்கள் 1ம் இடத்தை பாலிநகர் ஸ்கைலாப் விளையாட்டு கழகமும்,
2ம் இடத்தை முத்தமிழன் விளையாட்டுக் கழகமும் பெற்றனர்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்