Mon. Apr 29th, 2024

புதன்கிழமை சீருடை, பாடநூல் வழங்கும் நிகழ்வு, பரீட்சைகள் ஒரு மணித்தியாலம் நேரம் தாழ்த்தி நடைபெறும் _ வடமாகாண கல்வி பணிப்பாளர்

இலங்கையில் உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்குமான இலவச பாட நூல் மற்றும் இலவச சீருடை வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 14ம் திகதி புதன்கிழமை வைபவ ரீதியாக நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வு வடமாகாண பாடசாலைகளிலும் நடைபெறவுள்ளதால் புதன்கிழமை நடைபெறவுள்ள பரீட்சை ஒரு மணித்தியாலம் நேரம் தாழ்த்தி நடைபெறும் என வடமாகாண கல்வி பணிப்பாளர் தி.ஜோன்குயின்ரஸ் அறிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பாடசாலை அதிபர்கள், மாணவர்களின் பரீட்சையை கருத்தில் கொண்டு இந்நிகழ்விற்காக மிகக் குறுகிய நேரத்தை பயன்படுத்த வேண்டும். அத்துடன் இந்நிகழ்வு அன்றைய தினம் வடமாகாணத்தில் உள்ள 36 கோட்டங்களிலும் வைபவ ரீதியாக காலை இந்நிகழ்வு நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்