Sat. Apr 27th, 2024

வீதியில் நெல் உலர வைத்தவர் விபத்தில் மரணம்

வடமராட்சி பகுதியில் நெல் உலர் வைத்த கூலித் தொழிலாளிக்கு  விபத்து ஏற்பட்டதில் உயிரிழந்துள்ளார்.
வடமராட்சி, மந்திகை மாக்கிராய் பகுதியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் சாரையடி கூவில் பகுதியைச் சேர்ந்த பரராஜசேகரம் நாகேந்திரன் (வயது 57) என்பவரே உயிரிழந்துள்ளார்.
கொடிகாமம் கச்சாய்- புலோலி பருத்தித்துறை பிரதான வீதி மாக்கிராய் பகுதியில் வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணியளவில் நெல்லை உலரவிடுவதற்காக பரவிக் கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் அவர் மேல் மோதி விபத்துக்குள்ளாகியது.
பளையில் இருந்து கொடிகாமம் ஊடாக பருத்தித்துறை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் எதிரே நெல் பரவிக் கொண்டிருந்தவர் மீது மோதி விபத்துக்குள்ளாகிய நிலையில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
காலையில் அதிக பனி மூட்டம் இருள் காரணமாகவும் எதிரே முச்சக்கர வண்டி வெளிச்சத்துடன் வந்ததால் வீதியில் நெல் பரவியவரை தெரியவில்லை அதனாலேயே விபத்து இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மரணம் தொடர்பில் திடீர் மரண விசாரணை அதிகாரி ச.சிவராஜா விசாரணைகளை மேற்கொண்டு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டுள்ளார்.
 விபத்துத் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்