Mon. May 6th, 2024

பெண்கள் பிரிவில் பருத்தித்துறை சென்தோமஸ் அணி சம்பியன்

பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையிலான பெண்களிற்கான வொலிபோல் தொடரில் பருத்தித்துறை சென்தோமஸ் அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.

இதன் இறுதியாட்டம் இன்று திங்கட்கிழமை சிவானந்தா விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றது.
இறுதியாட்டத்தில் பருத்தித்துறை சென்தோமஸ் அணியை எதிர்த்து வல்வை விளையாட்டுக் கழக அணி மோதியது.
ஆட்டம் ஆரம்பம் முதல் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பருத்தித்துறை சென்தோமஸ் அணி 25:15, 25:09 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுச் சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்