கைதடி விபத்து சிகிச்சை பலனின்றி ஒருவர் பலி
நேற்று முன்தினம் நடைபெற்ற விபத்தில் படுகாயமடைந்த நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.
நேற்று முன்தினம் (10) ஞாயிற்றுக்கிழமை கைதடி பால வீதியில் சையிக்கிளில் சென்று கொண்டிருந்தவரை பின்னால் வந்த மோட்டார் சையிக்கிள் மோதியதில் விபத்து நடைபெற்றுள்ளது. இவ்விபத்தில் நுணாவில் கைதடியைச் சேர்ந்த சுப்பர் சுதாகர் (வயது- 52) என்பவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போதிலும் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக பொலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.