புலோலியில் கொரோனா நோயாளி மரணம்
வடமராட்சி புலோலி வடகிழக்கைச் சேர்ந்த 49 வயதுடைய பெண் ஒருவருக்கு கொரோனா பாதிப்பிற்கு உள்ளான நிலையில் இன்று வியாழக்கிழமை மரணமடைந்துள்ளார்.
இன்று யாழ் போதனா வைத்தியசாலையில் மரணமடைதுள்ளதாக தெரியவந்துள்ளது.
இவர் நேற்று புதன்கிழமை மூச்சுத் திணறல் மற்றும் காச்சல் காரணமாக நெல்லியடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு RAT பார்த்த பொழுது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் இன்று காலை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர் ஏற்கனவே சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.