Thu. May 2nd, 2024

புடவையகம் மீது குண்டுத் தாக்குதல்

யாழில் உள்ள புடவையகம் ஒன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்று இரவு நடைபெற்றுள்ளது.

கொக்குவில் குளப்பிட்டிச் சந்தியில் அமைந்துள்ள புடவையகம் ஒன்றின் மீதே பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில் பல லட்சம் பெறுமதியான பொருட்கள் தீயில் எரிந்து நாசம் செய்யப்பட்டுள்ளது.
தொழில் போட்டி காரணமாக இச்சம்பவம் நடந்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  துணிவகைகளை இறக்குமதி செய்வதில் குறித்த கடை உரிமையாளருக்கும் இன்னெரு நபருக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் கூலிப் படைகளை வைத்து இந்நாசகாரச் செயல் நடைபெற்றிருக்கலாம் என பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்