நாளை மாலைசந்தையானில் பிசிஆர்
மாலைசந்தையான் திருவிழா காலங்களில் கலந்து கொண்டவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
நாளை காலை 9 மணிமுதல் மாலைசந்தையான் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
மாலைசந்தையான் ஆலயத் திருவிழாவில் பலர் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்காது திருவிழாவில் கலந்து கொண்டமைக்கு சான்றாக பலரின் முகநூலில் பதிவிடப்பட்டுள்ளது. இதனால் சமூகத் தொற்று ஏற்படாமல் இருபதற்காக யாருக்காவது தொற்று ஏற்பட்டிருக்கிறதா என்பதனை அறிவதற்காக பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டவுள்ளது. இதனால் திருவிழா நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் சமூக நலன்கருதி பிசிஆர் பரிசோதனையை மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.