வீதியால் சென்ற பெண்ணிடம் அங்க சேட்டை ஒருவர் கைது
வீதியால் சென்ற பெண்ணின் இடுப்பை கிள்ளியதாக நெல்லியடி பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நேற்று முன்தினம் துன்னாலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
நேற்று துன்னாலை பகுதி வீதியால் பெண் ஒருவர் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த இளைஞர் ஒருவரால் பெண்ணின் இடுப்பை கிள்ளியதாக கூறி நெல்லியடி பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த பெண் இளைஞரை அடையாளம் காட்டப்பட்டதையடுத்து சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவரை பொலீஸார் கைது செய்துள்ளனர்.