Thu. May 2nd, 2024

பாடசாலைகளை எவ்வாறு ஆரம்பிக்க வேண்டும்

பாடசாலைகளை ஆரம்பித்தல் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தடுப்பூசி ஏற்றல் மற்றும்  பாதுகாப்பான போக்குவரத்து தொடர்பாக கலந்துரையாடல் ஒன்று  நேற்று அலரி மாளிகையில்  நடைபெற்றது.
கொவிட்-19 தொற்று காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீண்டும் திறக்கும் போது, மாணவர்களின் தொற்றுநோய் அறிகுறிகள் மற்றும் அவர்களது மருத்துவப் பிரச்சினைகளைக் கண்டறிய குழந்தை மருத்துவர்களின் உதவியை பெறுமாறு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் நேற்று பிற்பகல் கல்வி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
கொவிட் தொற்று நிலைமை கட்டுப்படுத்தப்பட்ட பின்னர், உடனடியாக, கட்டம் கட்டமாக, பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதன் அவசியம் குறித்து சுட்டிக்காட்டிய கௌரவ பிரதமர் அவர்கள் –
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான தடுப்பூசிகளைப் பெற்றுக் கொடுத்தல் மற்றும் பாதுகாப்பான போக்குவரத்து தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது.
அதற்கமைய நாடு முழுவதும் உள்ள 99 கல்வி வலயங்களுக்கும் தமது சங்கத்தின் சார்பில் பிரதிநிதிகளை பெயரிட்டு மேற்படி நடவடிக்கையை முறையாக முன்னெடுப்பதாக சங்கத்தின் பிரதிநிதிகள் குறிப்பிட்டனர்.
பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான தடுப்பூசி திட்டமொன்று செயற்படுத்தப்படின், அதன்போது –
தரம் 11 மற்றும் தரம் 13 மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா அவர்கள் தெரிவித்தார்.
இந்த பணியை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு –
சுமார் இரண்டு இலட்சத்து எழுபத்து ஒன்பது ஆயிரம் ஆசிரியர்கள்,
மற்றும் சுமார் மூன்று இலட்சம் கல்விசாரா ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு தடுப்பூசி வழங்குவதன் முக்கியத்துவமும் பேராசிரியர் கபில பெரேரா அவர்களினால் நேற்று சுட்டிக்காட்டப்பட்டது.
நாட்டின் எதிர்கால சந்ததியினரையும் அவர்களுக்கு வழிகாட்டும் ஆசிரியர்களையும் பாதுகாப்பதற்கு அரசாங்கம் எப்போதும் நடவடிக்கை மேற்கொள்ளும் என்பதனை கௌரவ பிரதமர் இதன்போது நம்பிக்கையாகத் தெரிவித்தார்.
பாடசாலைகள் ஆரம்பிக்கும்போது மாணவர்களும் ஆசிரியர்களும் பாதுகாப்பான முறையில் பாடசாலைகளுக்குள் அனுமதிக்கப்படுவதற்கு ஏற்ற வேலைத்திட்டம் ஒன்றைச் செயற்படுத்த வேண்டும் என்பதனைப் பரிந்துரைத்த கௌரவ பிரதமர்,
பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் போக்குவரத்து நடவடிக்கைகளின் போது பின்பற்றப்பட வேண்டிய சுகாதார நடைமுறைகள் தொடர்பாகவும் கவனம் செலுத்துமாறும் கேட்டுக்கொண்டார்.
மேற்படி கலந்துரையாடலில் – கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், பிரதமரின் செயலாளர் காமினி செனரத், கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா, பாடசாலை நடவடிக்கைகளுக்கான மேலதிக செயலாளர் எல். எம். டீ. தர்மசேன, பாடசாலை சுகாதார பிரிவின் பணிப்பாளர் கமனி குணரத்ன, வைத்தியர்களான டி. எல். பீ. சோமதுங்க, மகேந்திர ஆர்னல்ட், ஷாமன் ரஜீந்திரஜித், சுரந்த பெரேரா, பேராசிரியர் சனத் லமாபதுசூரிய உள்ளிட்ட குழந்தை மருத்துவ வைத்தியர்கள் சங்கத்தின் வைத்தியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்