Thu. May 2nd, 2024

பாணிற்குள் போத்தல் மூடி

வவுனியாவில் விற்பனை செய்யப்பட்ட பாணில் போத்தல் மூடி காணப்பட்டதையடுத்து குறித்த பேக்கரிக்கு எதிராக சுகாதாரப் பிரிவினரால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இன்று வவுனியா வேப்பங்குளம் பகுதியில்  இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பல் மேலும் தெரியவருவதாவது,
பயணத் தடை காரணமாக வாகனத்தில் எடுத்துச் சென்று பேக்கரி உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  ஆனால்
வவுனியா, பட்டக்காடு பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றில் உற்பத்தி செய்யப்பட்ட பாணினை வாகனத்தில் எடுத்துச் சென்று விற்பனையில் ஈடுபட்ட போது வேப்பங்குளம் பகுதியில் வாகனத்தை மறித்து ஒருவர் பாணினை வாங்கியுள்ளார். அவர் உணவிற்காக பயன்படுத்த முற்பட்ட போது பாணுடன் போத்தல் மூடி காணப்பட்டது. இதனையடுத்து பொதுச் சுகாதார பரிசோதகர் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்