பல்கலைக் கழகப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்பாடு ஆரம்பம்
பல்கலைக் கழகப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்பாடு இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் சுமார் 1,600 பேருக்கும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஏனைய பீடங்களில்500 பேருமாக மொத்தமாக 2100 பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்த உத்தரவுக்கு அமைய இன்று காலை யாழ் பல்கலைக் கழக பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இதற்கமைய இன்றும் நாளையும் இரு தினங்கள் பல்கலைக்கழகப் பணியாளர்களுக்கு சினோபாம் கொரோனா தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.