Fri. Apr 26th, 2024

பொலிகண்டி பகுதியில் சுகாதார நடைமுறைகளை மீறி மீன் விற்பனை

பொலிகண்டி ஆலடி பகுதியில் மீன் வியாபாரத்தில் ஈடுபடும் பலர் முகக் கவசம் அணியாமலும், சமூக இடைவெளி பேணாமலும் வியாபாரத்தில் ஈடுபடுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
பொலிகண்டி ஆலடி மீன் சந்தைக்கு அருகாமையில் இருந்து மீன் வியாபாரம் செய்பவர்கள், மற்றும் உட் பாதைகள் வழியாக வெளி இடங்களில் இருந்து  மீன் வாங்க வருபவர்களில் சிலர், cooler வாகனத்தில் வந்து  மீன் ஏற்றுபவர்கள் என யாருமே சரியாக முக கவசம் அணிவதில்லை. இதனால் அவ்விடத்தில்  அன்றாடம் ஜீவனோபாயத்திற்காக கடல்தொழிலுக்கு செல்லும் கடல்தொழிலாளர்களும் அவ் ஊர் மக்களும் Covid 19 தொற்றும் அபாயத்தில் உள்ளனர்.எனவே இந்த வியாபாரிகள் மீதும் வெளியூர்களில் இருந்து மீன் வாங்க வருபவர்கள் மீதும்  உரிய நடவடிக்கை எடுத்து அப் பகுதியில் covid19 பரவாமல் தடுக்கவேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கடந்த வாரம் இப் பகுதியில் ஒருவருக்கு covid 19 தொற்று உறுதிசெய்யப் பட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்