பருத்தித்துறை வைத்தியசாலையில் ஒருவருக்கு கொரோனா
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இன்று 778 பேருக்கான பரிசோதனையில் யாழ் மாவட்டத்தில் 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.