இன்று 37 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
இன்று திங்கட்கிழமை யாழ் மாவட்டத்தில் 36 பேர் உட்பட 37 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.
இன்று 778 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் யாழ் மாவட்டத்தில் 36 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவருக்குமாக 37 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் யாழ் சுகாதார பிரிவில் நேரடித் தொடர்பு கொண்ட 18 பேருக்கும், எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 4 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சண்டிலிப்பாய் சுகாதார பிரிவில் பண்டத்தரிப்பு ஆயுர்வேத ஊழியர் மூவருக்கும், நேரடித் தொடர்பு கொண்ட இருவருக்கும் என 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரவெட்டி சுகாதார பிரிவில் இருவருக்கும், யாழ் போதனா வைத்தியசாலையில் தனிமைப்படுத்தல் பிரிவில் பொலீஸ் ஒருவர் உட்பட நால்வருக்கும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வெளி நோயாளர் பிரிவில் சிகிச்சை பெற வந்த ஒருவருக்கும் என 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.