பருத்தித்துறை கோட்டத்திற்கான இலவச பாடநூல், சீருடை வழங்கும் உத்தியோக பூர்வ ஆரம்ப வைபவம்
பருத்தித்துறை கோட்ட இலவச பாடநூல், சீருடை வழங்கும் உத்தியோக பூர்வ ஆரம்ப வைபவம் இன்று புதன்கிழமை யா/புற்றளை மகா வித்தியாலயத்தில் பருத்தித்துறை கோட்டக் கல்விப் பணிப்பாளர் க.கண்ணன் தலைமையில் நடைபெற்றது.
இதில் புற்றளை மகா வித்தியாலய அதிபர் ஜி.ரவிக்குமார், வடமராட்சி வலயக்கல்விப் பணிப்பாளர் க.சத்தியபாலன், உதவிக் கல்விப் பணிப்பாளர் க.பத்மகாந்தன், ஈழ மக்கள் ஐனநாயகட்சி இணைப்பாளர் ஐ.சிறீரங்கேஸ்வரன் ஆகியோரும் அயற்பாடசாலை அதிபர்களும், மாணவர்கள், ஆசிரியர்களும் பங்குபற்றியிருந்தனர்.