Mon. Apr 29th, 2024

அச்சுவேலி பகுதியில் களவு, ஒரு மணித்தியாலத்தில் திருடனை பிடித்த பொலிஸார்

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் வெளிநாட்டில் இருந்து வந்து தங்கியிருந்த நபரொருவரின் வீட்டில் இருந்து மடிக்கணினி, கையடக்க தொலைபேசி, கடவுச்சீட்டு, வங்கி அட்டைகள், வங்கி புத்தகங்கள் என பெறுமதியான பொருட்கள் நேற்றைய தினம் களவாடப்பட்டடு இருந்த நிலையில் நேற்று (13) அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து விரைந்து செயல்பட்ட பொலிஸார் சுமார் ஒரு மணி நேரத்தில் அச்சுவேலி பகுதியை சேர்ந்த 25 வயது சந்தேகநபரை களவாடப்பட்ட பொருட்களுடன் கைது செய்யதுள்ளார்கள்.

 

விசாரணைகளின் பின்னர் சந்தேக நபரை நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்