Mon. Apr 29th, 2024

பருத்தித்துறையில் துர்நாற்றம் வீசும் குப்பை தொட்டி

பருத்தித்துறை நகரத்தின் மத்தியில் அமைந்துள்ள குப்பைத் தொட்டியால் பருத்தித்துறை பெரும் சுகாதார சீர்கேடுகள் இடம்பெறுவதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
பருத்தித்துறை மரக்கறி சந்தை கழிவுகளை மேலே இருந்து உடனடியாக அகற்றுவது கடினம் என கருதி அதற்காக நகரத்தின் மத்தியில் இந்த குப்பைத்தொட்டி அமைக்கப்பட்டு பாராமரிக்கப்பட்டு வந்ததுள்ளது. தற்போது இந்த குப்பை தொட்டியதால் மரக்கறி சந்தை வியாபாரிகள் தவிர்ந்த பிரதேச மக்களும் இங்கு கொண்டுவந்து அனைத்து குப்பைகளையும் ஏறிந்து விட்டு செல்வதால் அந்த இடம் பிற்பகல் தொடக்கம் குப்பைகள் நிறைந்து நாற்றம் வீச தொடங்கி விடுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். பருத்தித்துறை நகர் பகுதியில் பல இடங்களில் குப்பை தொட்டிகள் அமைக்கப்படாமையே இதற்கான காரணம் எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்