கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் சிறப்புற நடைபெற்ற நாவலர் குருபூஜை நிகழ்வு
கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் இன்று 14.12.2022 காலை நாவலர் குருபூஜை நிகழ்வு கலாசாலையின்
அதிபர் வீ. கருணலிங்கம் தலைமையில் நடைபெற்றது.
கலாசாலையில் உள்ள நாவலர் திருவுருவச் சிலை முன்பாக இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆசியுரையை கலாசாலையின் பிரதி அதிபர் ச.லலீசன் வழங்கினார்.
ஆசிரிய மாணவர் கா. பிரசாந்த் தலைமையில் நாவலர் பற்றிய பன்முகப் பார்வை என்ற பொருளில் கருத்தரங்கும் இடம்பெற்றது.
இதில் ஆசிரிய மாணவர் றொபேட் சுரேஷ் நாவலரின் சமூகப் பணி என்ற பொருளிலும் ஆசிரிய மாணவி எல். எம். சமீனா நாவலரின் தமிழ்ப் பணி என்ற பொருளிலும்
ஆசிரிய மாணவி தேன்மொழி நாவலரின் சைவப்பணி என்ற பொருளிலும் கருத்துரைகளை வழங்கினர்கள். விரிவுரையாளர்
கு.பாலசண்முகன்
கருத்தரங்கு பற்றிய மதிப்பீட்டுரை ஆற்றினார்.