அச்சுவேலி புனித தெரேசாள் மகளிர் கல்லூரியின் பரிசளிப்பு விழா
அச்சுவேலி புனித தெரேசாள் மகளிர் கல்லூரியின் பரிசளிப்பு விழா நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை முற்பகல் 9.30 மணிக்கு கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
கல்லூரி முதல்வர் அருட்சகோதரி அருள்மறியா தலைமையில் நடைபெறும் இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக வடமாகாண கல்வித் திணைக்களத்தின் பிரதம கணக்காளர் செல்வி.சிவகுமாரி முருகேசு, சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாண கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் தங்கவேலு பால்ராஜ், கெளரவ விருந்தினராக கல்லூரியின் பழைய மாணவி அருட்சகோதரி புஸ்பராணி ராஜப்பு ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.