Sun. Apr 28th, 2024

நெல்லியடி பொலீஸாரின் அதிரடி நடவடிக்கை, 24 மணி நேரத்தில் பலர் கைது

நெல்லியடி பொலீஸாரின் அதிரடி நடவடிக்கையால் கடந்த 24 மணி நேரத்தில் கஞ்சா, கசிப்பு, மணல் கடத்தல், பிடியாணை பிறப்பிக்கப்பட்டோரை கைது செய்தல் என பல சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டோரை கைது செய்துள்ளனர்.

நேற்று  வியாழக்கிழமை முதல் இன்று வெள்ளிக்கிழமை வரை நெல்லியடி பொலீசார் தமது அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
நெல்லியடி பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட பிரிவில் பல்வேறுபட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தவர்களை பருத்தித்துறை நீதி மன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. இதில் 16 பேரை பொலீஸார் கைது செய்துள்ளனர். அதேபோல் அனுமதியின்றி மணல் ஏற்றிய 3 டிப்பர் சாரதிகளையும், 1500 மில்லி லிட்டர் கசிப்பை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் துன்னாலை பகுதியில் இருவரையும், 1800 மில்லி கிராம் கஞ்சாவை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் துன்னாலை பகுதியைச் சேர்ந்த ஒருவரையும் நெல்லியடி பொலீசார் கைது செய்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்