உதைபந்தாட்டத்தில் பொன்விழா காணும் தி.வரதராஜனுக்கு பாராட்டு விழா
உதைபந்தாட்டத்தில் 50 ஆண்டுகளை பூர்த்தி செய்து விளையாட்டுத்துறைக்கு பெரும் பங்காற்றிய திரவியசிங்கம் வரதராசன் அவர்களுக்கு பாராட்டு விழா நிகழ்வு நாளை சனிக்கிழமை பிற்பகல் 5 மணிக்கு யாழ் பீச் விக்னேஸ்வரா திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
வைத்திய கலாநிதி வே.கமலநாதன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்விற்கு மெச்சுரைகளை முன்னாள் மாநகர முதல்வர் இமானுவல் ஆனோல்ட், யாழ் பல்கலைக்கழக விளையாட்டு விஞ்ஞான அலகின் விரிவுரையாளர் செ.திருமாறன், ஓய்வுநிலை கோட்டக் கல்விப் பணிப்பாளர் மா.நவநீதமணி, வடமாகாண உதைபந்தாட்ட அபிவிருத்தி குழு தலைவர் அ.நாகராஜன், வடமாகாண உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் இ.இராஜசீலன், கொழும்பு பல்கலைக்கழக கல்வி பீட சிரேஷ்ட விரிவுரையாளர் அ.பெளநந்தி ஆகியோரும் வழங்கவுள்ளனர்.