Thu. May 2nd, 2024

நியூசிலாந்து காந்தி இல்லத்தின் தமிழ் நிதியத்தினரால் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு

நியூசிலாந்து காந்தி இல்லத்தின் தமிழ்
நிதியத்தினரால் வன்னி ஹோப் ( Vanni Hope Australia) நிறுவனத்தன் ஏற்பாட்டில் கொரோனா பெரும் தொற்று காரணமாக தமது  வாழ்வாதாரத்தினை இழந்த  குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வு திக்கம் பொது மண்டபத்தில் வைத்து தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு Usdf நிறுவனத்தால் திக்கம் மாதர் சங்கத்தினரால் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
கொரோனா பெருந் தொற்றுப் பரவல் மற்றும் தனிமைப்படுத்தல் நடைமுறை காரணமாக  வடமராட்சி அல்வாய் மேற்கு கிராமத்தில் பலர் தங்களது வாழ்வாதாரத்தினை இழந்து மிகவும் துன்பப்படும் நிலையில் உள்ள  தெரிவுசெய்யப்பட்ட 100  குடும்பங்களுக்கே இவ்வாறு உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
ஒவ்வொருவருக்கும் தலா ஆயிரத்து ஐநூறு பெறுமதியில் வழங்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்