Thu. May 2nd, 2024

இராணுவத்தினரால் வீடமைப்பு – மக்கள் வரவேற்பு

பெண் தலைமைத்துவத்தைக் கொண்டு இயங்கும் குடும்பத்தினருக்கு இராணுவத்தினரால் வீடு அமைத்துக் கொடுப்பதற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.
வடமராட்சி இமையாணன் இலக்கணாவத்தை பகுதியில் கணவனை இழந்து குழந்தையுடன் வாழும் ஒருவருக்கே வீட்டிற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
வடமராட்சி எள்ளங்குளம் பகுதியில் இயங்கும் 551கட்டளை பணியகத்தின் பிரிகேடியர்
விக்கிரம சிங்க அவர்களினால் அடிக்கல் நாட்டப்பட்டது.
எள்ளங்குளம் பகுதியில் இயங்கும் இராணுவத்தினரால் 9 லட்சம் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்