நாளை பதில் பாடசாலை அனைவருக்கும்
நாளை சனிக்கிழமை அனைத்து தரங்களுக்குமான பதில் பாடசாலைகள் நடைபெறும் என வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
சீரற்ற காலநிலை காரணமாக நடைபெறாத பாடசாலைகளுக்கான பதில் பாடசாலைகள் நாளை சனிக்கிழமை நடைபெறும் எனவும், பதில் பாடசாலைகள் அனைத்து தரங்களை கொண்ட வகுப்பினர் அனைவருக்கும் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.