Tue. Apr 30th, 2024

தென்மராட்சியில் வாள் வெட்டு

தென்மராட்சி பகுதியில் ஒருவர் வாள் வெட்டுக் காயங்களுடன் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இச்சம்பவம் சற்று முன்னர் மிருசுவில் கரம்பகம் பகுதியில் நடைபெற்றுள்ளது. சம்பவத்தில் குறித்த பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞரே வெட்டுக் காயங்களுக்குள்ளாகிய நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
நேற்று சிலர் குறித்த பகுதியில் வாளுடன் திரிந்ததாகவும் அதனை குறித்த நபர் தட்டிக் கேட்டதாகவும் ஒரு சிலர் தெரிவித்துள்ளனர். மற்றுமொரு சிலர் திருட்டு மணல் ஏற்றுவதில் ஏற்பட்ட பிரச்சினை எனவும் கூறுகின்றனர். இவரை வெட்டுக் காயத்திற்கு உட்படுத்தியோர் கச்சாய் கெற்வேலி பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக பொலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்