திரு இருதயக் கல்லூரி எச்சரிக்கை நோட்டீஸ் அகற்றப்பட்டது.
கரவெட்டி சுகாதார பணிமனைக்குட்பட்ட பிரிவில் உள்ள யா/திரு இருதயக் கல்லூரி இயங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார பணிமனையால் அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதாக உறுதியளித்ததன் பேரில் தனிமைப்படுத்தப்பட்ட எச்சரிக்கை நோட்டீஸ் இன்று வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டதுடன் எதிர்வரும் திங்கட்கிழமை பாடசாலை வழமைபோல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தற்போது வடமராட்சி பகுதியில் தொற்றுள்ளானவர் பல பகுதிகளில் நடமாடியுள்ளதால் சமூகத் தொற்றை குறைக்கும் வகையில் நாளை சனிக்கிழமை காலை 10 மணிக்கு கரவெட்டி கோட்ட பாடசாலை அதிபர்களுக்கான கலந்துரையாடல் கரவெட்டி சுகாதார பணிமனையில் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.