Fri. May 17th, 2024

அரச பேரூந்துடன் சற்று முன்னர் முரண்பாடு

இலங்கை போக்குவரத்து பருத்தித்துறை சாலை பேரூந்துடன் மந்திகை சாரையடிப் பகுதியில் சிலர் முரண்பாட்டில் ஈடுபட்டுள்ளதாக பருத்தித்துறை பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இரு தினங்களுக்கு முன்னர்  யாழ்ப்பாணத்தில் இருந்து வெவ்வேறு பிரதேசங்களுக்குச் செல்லும் சேவை இரவு 8 மணி வரை நீடிக்கப்பட்டு செயற்பட்டு வருகின்றது. இந்நிலையில் சற்று முன்னர் இரவு சேவையில் ஈடுபட்ட பேரூந்துடன் தனியார் பஸ் சாரதி முரண்பட்டதாக பருத்தித்துறை பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.  தனியார் பஸ் சேவைக்கும், இலங்கை போக்குவரத்து சேவைக்கும் இடையிலான நேர ஒழுங்கு சம்பந்தப்பட்ட எவராலும் ஒழுங்குபடுத்தாமையே  காரணம் என தெரியவந்துள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்