Fri. May 17th, 2024

இன்று வடமராட்சி கிழக்கு உட்பட 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

வடமராட்சி கிழக்கு இருவர் உட்பட வடமாகாணத்தில் இன்று 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார். இன்று வியாழக்கிழமை யாழ் போதனா வைத்தியசாலையில் 441 பேருக்கும்  யாழ் மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 248 பேருக்கும் என Covid-19 பரிசோதனை ஒட்டு மொத்தமாக 689 பேருக்கு பரிசோதனை  செய்யப்பட்டது. இதில் மருதங்கேணி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட அம்பன் பகுதியில் கொழும்பில் இருந்து வீடு திரும்பி தனிமைப்படுத்தி வைக்கப்பட்ட தாய் மற்றும் பிள்ளைக்கும், கொழும்பு சென்று சில நாட்கள் தங்கியிருந்து வீடு திரும்பிய பூநகரி பகுதியைச் சேர்ந்த 7 பேருக்கும்,  சங்கானை பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் உடுவில் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் என 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்