Tue. Apr 30th, 2024

திருட்டு சம்பவத்தில் 5 பேரை வவுனியா பொலீஸார் கைது செய்துள்ளனர்

வவுனியாவில் கோயில்கள் உட்பட பல இடங்களில் திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய 5 பேரை பொலீஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் தாலிக்குளம், பாவற்குளம், குருக்கள்புதுக்குளம் ஆகிய பகுதியைச் சேர்ந்த 19, 23, 25 வயது இளைஞர்கள் 5 பேரை பூவரசன்குளம் பொலிசார் இன்று  கைது செய்துள்ளனர்.
வவுனியாவில் கடந்த ஒரு வாரமாக வவுனியா, பூவரசன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாவற்குளம் படிவம் 4 பிள்ளையார் ஆலயம், பாவற்குளம் படிவம் 5 அம்மன் ஆலயம், பாவற்குளம் பகுதியில் உள்ள தோட்டக்காணி, பூவரசன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 3 வீடுகள் என்பவற்றில் கிணற்றில் நீர் இறைப்பதற்காக பொருந்தப்பட்டிருந்த மோட்டர்கள், ஒலிபெருக்கியின் சாதனங்கள் என்பன திருடப்பட்டிருந்தன. என்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணையை முடுக்கி விட்ட பொலீஸார் சந்தேகத்தின் பேரில் 5 பேரைக் கைது செய்துள்ளதுடன்
அவர்களிடம் இருந்து இருந்து 6 நீர் இறைக்கும் மோட்டர்கள், 2 ஒலிபெருக்கி சாதனங்கள், 1 மைக், ஆலய உண்டியல் என்பவற்றை மீட்டுள்ளதுடன், திருட்டு சம்பவத்தின் போது பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றியுள்ளனர்.
பூவரசன்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமிந்த எதிரிசூரிய தலைமையில் பொலிஸ் பரிசோதகர் ஜெகத், உப பொலிஸ் பரிசோதகர்களான ரத்னாயக்க, தினேஸ்கரன், பொலிஸ் சார்ஜன்ட் ஹெட்டியாராட்சி (60588),

பொலிஸ் கான்டபிள்களான ரத்னாயக்க (67428), பிகரடோ (90891), ஜெயரலோன் (68992), ரணசிங்க (14926), சமரக்கோன் (60405), திஸநாயக்கா (86787) ஆகியோரை உள்ளடக்கிய பொலிஸ் குழு விசாரணைகளை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்