வவுனியாவில் 13 பேருக்கு கொரோனா
வவுனியாவில் 7 பொலீஸ் உத்தியோகத்தர்கள் உட்பட 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று இரவு வெளியான முடிவுகளின் அடிப்படையில் வவுனியா மாவட்டத்தில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில்
வவுனியா பொலீஸார் 7 பேருக்கும், நெளுக்குளம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 வயதுச் சிறுமி உட்பட இருவருக்கும், குட்செட் வீதியைச் சேர்ந்த ஒருவருக்கும், வவுனியா நகர் பகுதியில் ஒருவருக்கும், வவுனியா சிறைச்சாலை கைதி ஒருவருக்கும், ஹொரவப்பொத்தானை வீதியில் உள்ள வியாபார நிலையத்தில் ஒருவருக்கும் என 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.