தனி நடிப்பு, தனி இசையில் செம்பியன்பற்று மாணவன் அசத்தல்
வடமாகாண தமிழ்த்தின போட்டியில் தனி நடிப்பு மற்றும் கர்நாடக சங்கீத தனி இசைப் போட்டியில் முதலிடத்தைப் பெற்று யா/செம்பியன்பற்று அ.த.க பாடசாலையைச் சேர்ந்த செல்வன் ஆன்சன் நெரியோ அபினாஷ் தேசிய மட்ட போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.
வடமாகாண பாடசாலைகளுக்கிடையே நடைபெற்ற அகில இலங்கை கர்நாடக சங்கீதப்போட்டி தனி இசை மற்றும் தனி நடிப்பு என்பவற்றில் சிரேஷ்ட ஆண்கள் பிரிவில் யா/செம்பியன்பற்று அ.த.க பாடசாலையை பிரதிநிதித்துவம் செய்த ஆன்சன் நெரியோ அபினாஷ் மாகாணமட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்று தேசிய மட்ட போட்டிக்குத் தெரிவாகியுள்ளார்.
குறித்த மாணவனை ஆசிரியர் திரு செல்வமோகன் அவர்கள் வழிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.