கிளிநொச்சியில் மருத்துவ முகாம்
நடமாடும் மருத்துவ முகாம் ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சியில் இடம்பெற்றது.
நிறைவாழ்வு மையத்தின் ஏற்பாட்டில் குறித்த மருத்துவ முகாம் புதுமுறிப்பில் அமைந்துள்ள தென்னிந்திய திருச்சபை மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன் போது, பல்வேறு நோய்களிற்கான சிகிச்சைகள், மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான மக்கள் பயன் பெற்றனர்.
குறித்த மருத்துவ முகாமில், நிறைவாழ்வு மையத்தின் இயக்குனர் தயாளினி தியாகராஜா, அருட்தந்தை குகனேஸ்வரன் மற்றும் மருத்துவர்கள், தாதியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.